பிரித்தானியாவுக்கு கைத்துப்பாக்கி எடுத்துச் சென்றவர் கைது!

Date:

சட்டவிரோதமாக வைத்திருந்த ரிவோல்வர், 15 தோட்டாக்கள், ஒரு ரம்போ கத்தியுடன் இங்கிலாந்து செல்லவிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் டிசம்பர் 22ஆம் திகதி பிற்பகல் கைது செய்தனர்.

இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை விமானம் வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்ட செயற்பாடாகும். அவ்வாறான துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது அவசியமானால் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்படுவதற்காக டிசம்பர் 22 ஆம் திகதி மதியம் 12.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 54 வயதான பார்க்கர் ரொபர்ட் மைக்கேல் என்ற பிரித்தானிய பிரஜை கைது செய்யப்பட்டவர்.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்