முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு வவுனிக்குளமானது 26 அடி கொள்ளளவைகொண்ட வவுனிக்குலமானது 2 அடி மேலதிகமாக வான் பாய்வதால் மாந்தை கிழக்கிற்கான போக்குவரத்து பாதைகளான செல்வபுரம் – சிவபுரம் வீதி பாலத்தினை மீறி நீர் பாய்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது ,
இதேவேளை துணுக்காய் – நட்டாங்கண்டல் இணைப்பு வீதியான கறுத்த பாலம் மேலாக நீர் பாய்வதால் அதனூடான போக்குவரத்தும் துண்டிக்கப்படுள்ளது
இதேவேளை அரச தினைக்க்ளங்களுக்கான உத்தியோகத்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இருந்த சில பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன
இதேவேளை வெள்ள நீரில் சிக்கிய பல கால்நடைகள் காணாமல் போயிருந்ததுடன் சில கால்நடைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.




