தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் சூறாவளி டிசம்பர் 03 ஆம் திகதி 23.30 மணி அளவில் 12.8 பாகை வடக்கு அட்சரேகையிலும் 81.6 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .
இந்த அமைப்பு தொடர்ந்து அபிவிருத்தியடைந்து இலங்கையை விட்டு வடமேற்கு நோக்கி நகரும்.
இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 05, 2023க்குள் தெற்கு ஆந்திரா கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (04) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும், ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.




