விற்றமின் மாத்திரை வாங்குவதற்காக 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, கொள்ளையடித்த 18 வயது உடற் கட்டழகன் கைது!

Date:

83 வயதான மூதாட்டியை அடித்துக் கொலை செய்து, தொண்டு பணிகளுக்காக அவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்த 18 வயதான உடற் கட்டழகனான மாணவன் ஒருவனை கல்கிசை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உடற் கட்டழகிற்காக விற்றமின் மாத்திரைகள் வாங்குவதற்காக பணத்தை கொள்ளையடித்ததாக கைதான மாணவன் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 83 வயதுடைய திருமணமாகாத திலகா நளினி பெர்னாண்டோ என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்தேக நபர் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற இங்கிலாந்து பிரஜை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​மூதாட்டியை தாக்க பயன்படுத்திய கத்தி, அவரிடம் இருந்து திருடப்பட்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, கொலையின் போது சந்தேக நபர் அணிந்திருந்த டீ-சேர்ட் மற்றும் கால்சட்டை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மிஸ்டர் ஸ்ரீலங்கா ஜூனியர் உடற்கட்டமைப்பு போட்டியில் பங்குபற்றுவதற்கு தயாராகியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நவம்பர் மாதம் 29 ஆம் திகதி  இந்த கொலைச்சம்பவம் நடந்தது. மூதாட்டியின் தலையில் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்