திருடனை விரட்டிச் சென்று காணாமல் போன சாவகச்சேரி பொலிஸ்காரர் சடலமாக மீட்பு!

Date:

பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க ஜால கால்வாயில் குதித்த திருடனை பிடிக்க, தானும் கால்வாயில் குதித்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஸ்ணமூர்த்தி பிரதாபன் (99033) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (24) நீர்கொழும்பு வாவியின் சேடவத்த பகுதியில் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்.

பமுனுகம சேடவத்த குளம் என அழைக்கப்படும் இந்தக் குளம் நீர்கொழும்பு வாவியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பொலிஸ் கனான்ஸ்டபிளை தேடி வெலிசர கடற்படை முகாம் சுழியோடிகள், களனி பிரிவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் பேலியகொட பொலிஸ் உயிர் பாதுகாப்பு நீர்மூழ்கி குழுவினர் நேற்று முதல் ஜால கால்வாயிலிருந்து நீர்கொழும்பு முகத்துவாரம் வரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்