மின்சாரம் தயாரிக்கும் செலவை விட 12 மடங்கு அதிக விலைக்கு மின்சார சபை மக்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதாக உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு மீற்றர் வட்டிக்காரன் கூட இவ்வாறான செயல்களை செய்யமாட்டான் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத் தவறுகள் அனைத்தும் தற்போது மின்சாரக் கட்டணத்தில் இருந்து அறவிடப்படுவதாகத் தெரிவித்த கம்மன்பில, சிங்கப்பூரில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அறவிடப்படும் விலையே இலங்கையில் ஒரு யுனிட் மின்சாரத்துக்கு அறவிடப்படுகிறது என தெரிவித்தார்.
முழு நாட்டையும் இருளில் தள்ளிவிட்டு மின்சார சபையின் இருப்புநிலையை மட்டும் அழகாக்குவதன் விளைவு என்ன என கம்மன்பில கேள்வி எழுப்பினார்.




