14 வயது மனைவி குழந்தை பிரசவம்: 18 வயது கணவன் கைது!

Date:

சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டு அவரை தாயாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட 14 வயது 07 மாத வயதுடைய சிறுமி, குழந்தை பிரசவித்துள்ளார்.

அதன்படி புத்தளம் வைத்தியசாலை பொலிஸாரால் இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் தன்னை திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் அவர்களது திருமணச் சான்றிதழ் மற்றும் சிறுமியான மனைவியின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை

16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும்...

இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்