ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டரும் அதனுடன் சென்ற மற்றுமொரு உலங்குவானூர்தியும் இன்று பிற்பகல் வெல்லவாய புதுருவகல பாடசாலை விளையாட்டரங்கில் திடீரென தரையிறங்கியுள்ளன.

வெலிமடை பகுதிக்கு பயணித்த ரணில் விக்கிரமசிங்க அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எதிர்பாராத தருணத்தில் ஹெலிகொப்டர் தரையிறங்கியதையடுத்து, அங்கு பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து வேறு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

வாகனம் வரும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தருவகல கல்லூரியில் தங்கியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்