டயானா வெலிக்கடை பொலிசில் முறைப்பாடு!

Date:

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று மாலை பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் பாராளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும் அப்பகுதியில் இருந்துள்ளனர்.

அநீதிகளுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியதையடுத்து கோபமடைந்தவர்கள், தன்னை மிரட்டுவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என டயானா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சபாநாயகர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை என வருத்தம் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்