இஸ்ரேலை தண்டனையிலிருந்து விலக்கிய மேற்கு நாடுகளின் இரட்டை மனிதாபிமான அணுகுமுறையை கடுமையாக சாடிய அரபு நாடுகள்!

Date:

காஸாவில் நடக்கும் போரில் இஸ்ரேலின் ஆதரவாளர்களை அந்நாட்டிற்கு “தண்டனையின்மை” வழங்கியதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்தது.

நேற்று புதன்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று ஆதரவை வெளிப்படுத்திய சமநேரத்தில், அரபு நாடுகளின் கண்டனம் வெளியாகியுள்ளது.

முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளின் 57 உறுப்பினர் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் அவசர கூட்டத்தை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் “”பாலஸ்தீன மக்களுக்கு எதிரான மிருகத்தனமான ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் சர்வதேச நிலைப்பாடுகளைக் கண்டிக்கிறது, ஆக்கிரமிப்பு அதிகாரத்திற்கு பாதுகாப்பு வழங்கும் இரட்டைத் தரத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதையும் கண்டிக்கிறோம்“ என தெரிவித்துள்ளது.

காசாவின் சுகாதார அமைச்சின் படி 471 பேரைக் கொன்ற காசாவின் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் அஹ்லி அரபு மருத்துவமனையின் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேலை அதே அறிக்கை குற்றம் சாட்டியது.

மத்திய கிழக்கு முழுவதும் கோபத்தை தூண்டிய இந்த சம்பவத்திற்கு அரபு நாடுகளும் இஸ்ரேலை தனித்தனியாக குற்றம் சாட்டின.

ஆனால் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை புதன்கிழமை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி பைடன், தவறான இஸ்லாமிய ஜிஹாத் ரொக்கெட் மருத்துவமனையில் கொடிய படுகொலையை ஏற்படுத்தியது என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

சவூதியின் கடலோர நகரமான ஜெட்டாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), “பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இந்த கொடூரமான போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைப் பொறுப்பேற்க வேண்டும்” என்று சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.

வன்முறையைத் தடுக்கத் தவறிய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையையும் அது கண்டித்தது.

“இந்த கொடிய போரை நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு உந்துசக்தி கொடுத்தவர்கள், அதற்கு ஆயுதங்களை வழங்கியவர்கள் மற்றும் இராணுவ வலுவூட்டல்களை அனுப்பியவர்கள் இந்த கொடூரமான குற்றத்தை செய்த அனைவரும் இந்த குற்றத்துடன் கூட்டு சேர்ந்துள்ளனர்” என்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மலிகி தனது கருத்துகளில் கூறினார்.

காஸா மீதான முற்றுகையை நீக்க வேண்டும் என்று கூறிய சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் பொறுப்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார்.

ஒரு மனிதாபிமான பேரழிவைத் தடுக்க காசாவிற்கு உதவி வழங்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம், என்றார்.

பாலஸ்தீன அரசை நிறுவ வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று இளவரசர் பைசல் கூறினார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், இஸ்ரேல் “அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் முழு ஆதரவுடன்” செயல்படுகிறது என்றார்.

முன்னதாக, அவர் ஜெட்டாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகள் அதன் தூதர்களை வெளியேற்ற வேண்டும் மற்றும் “இந்த ஆட்சிக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்” என்றார். ஆனால், அது OIC அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்