இங்கிலாந்து கனவு கனவு இறப்பில் முடிந்தது: கொடிகாமம் இளைஞனின் உடல் பிரான்ஸில் மீட்பு!

Date:

பிரான்சில் இலங்கைத் தமிழர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வடக்கு  பிரான்ஸின் டன்கேக் மாவட்டத்திலுள்ள ஆறொன்றில் இருந்து, கடந்த 1ஆம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அந்த பகுதியிலுள்ள அகதி முகாமொன்றில் தங்கியிருந்த கொடிகாமம் கச்சாய் தெற்கு பகுதியை சேர்ந்த சண்முகராஜா தினேஸ் (33) என்ற இளைஞன், சட்டவிரோதமாக முகவர்கள் ஊடாக பிரிட்டனுக்கு செல்ல புறப்பட்ட நிலையில், காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் பிரான்ஸ் பொலிசாரிடம் முறையிட்டிருந்தனர்.

இதையடுத்து, பொலிசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சண்முகராஜா தினேஸ் என்பதை உறுதி செய்தனர்.

பிரான்ஸ் வடக்கு டன்கேக் மாவட்ட எல்லையில் உள்ள 40 கிலோமீற்றர் அளவான குறுகிய நீரெல்லை, இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளை பிரிக்கிறது. பிரான்ஸ் ஊடாக இங்கிலாந்து செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் இந்த மார்க்கத்தையே பயன்படுத்துவதால், அடிக்கடி இங்கு உயிரிழப்புக்கள் பதிவாகிறது.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்