தினமும் 18 மணித்தியாலங்கள் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடும் மாணவன் உயிர் மாய்ப்பு!

Date:

கையடக்கத் தொலைபேசியை பெற்றோர் எடுத்துச் சென்றதாக எண்ணி உடலில் கத்தியால் அறுத்து வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

இந்த இளைஞன் ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ளார். அவ்வாறு செய்ய வேண்டாம் என பெற்றோர் எச்சரித்ததால், இந்த இளைஞன் கத்தியால் தனது உடலை வெட்டியுள்ளார்.

பன்வில, கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற இளைஞனே வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.

அவர் கடிதமொன்றை எழுதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் குடும்பத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தனிமையில் மொபைல் போன் கேம் விளையாடுவதற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்