பீடி உற்பத்தியாளரை கடத்தி கப்பம் பெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நீக்கம்

Date:

வலஸ்முல்லையில் பீடி உற்பத்தி செய்த நபரை கடத்திச் சென்று தாக்கி கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தங்காலை கலால் பிரிவு பொறுப்பதிகாரி  உட்பட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு கலால் உத்தியோகத்தர்கள், கலால் உத்தியோகத்தரான சாரதி மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் உள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வலஸ்முல்ல பீடி உற்பத்தியாளரின் உரிமம் ஜூலை 26ஆம் திகதியுடன் காலாவதியானது. இதன் காரணமாக தங்காலை கலால் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் உற்பத்தியாளரிடம் சென்று வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி நீதிமன்றத்திற்குச் செல்லாமல் 14 இலட்சம் ரூபாவை செலுத்தி வழக்கை தீர்த்து வைக்குமாறு கோரியுள்ளனர். இதற்கு பீடி உற்பத்தியாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பீடி உற்பத்தியாளரை கலால் திணைக்கள அதிகாரிகள் பலவந்தமாக கடத்திச் சென்று தாக்கி 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் கடத்தப்பட்ட விதம் அருகே சி. சி. டி. வி. கமராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, வலஸ்முல்ல பிரதேசத்தில் பீடி உற்பத்தியாளர் ஒருவரை தாக்கி கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 4 கலால் அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய கலால் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தரம் பாராமல் சட்டத்தை அமுல்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் இன்றி பீடி இலை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க இலஞ்சம் கேட்டு தாக்கிய குற்றத்திற்காக தங்காலை கலால் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்