25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை யுவதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி அச்சமின்றி காதலர்களை பிரியலாம்!

சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சட்டங்கள், காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறவு முறிந்த பிறகு அவர்களைத் துன்புறுத்தும் நோக்கத்துடன், மற்றவர்கள் அவற்றைப் பார்க்கும் வகையில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் சமர்ப்பித்தார்.

இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்துக்காக பிடிபடும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், இதுபோன்ற குற்றத்தில் இரண்டாவது முறை அல்லது மீண்டும் மீண்டும் பிடிபடும் நபருக்கு உரிய தண்டனை அல்லது அபராதம் இரட்டிப்பாக்கப்படலாம் அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் இரட்டிப்பாக இருக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment