யாழ்ப்பாணம், உரும்பிராயில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து பெருமளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) அதிகாலை இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது.
பிரித்தானியாவிலிருந்து விடுமுறையில் வந்துள்ள குடும்பத்தினர், நேற்று நல்லூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். பின்னர் படுக்கைக்கு சென்றுவிட்டனர்.
வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 55 பவுண் தங்க நகைகளையும், 60 ஸ்ரேலிங் பவுண்ஸ் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



