ஒரு தடவைக்கு ரூ.10… 5ஆம் வகுப்பு சிறுமியை ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 68 வயது முதியவர்!

Date:

மேற்கு வங்கத்தில் 68 வயது முதியவர் ஒருவர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு மாத காலமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, டார்ஜிலிங் மாவட்டத்தின் கோரிபாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது.

சிறுமியிடம் பணம் இருப்பதை அவதானித்த பெற்றோர், அது குறித்து விசாரித்த போது, சிறுமி ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி வந்தது தெரிய வந்தது.

பெற்றோர் அளித்த புகாரின்பேரில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரான சீதாராம் சிங் மீது கடந்த திங்களன்று போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கின்றனர்.

இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ‘எஃப்.ஐ.ஆர் படி, சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் சம்பவங்கள் நடந்தன. குற்றம்சாட்டப்பட்ட உள்ளூர்வாசியான முதியவர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு ஒவ்வொரு முறையும் சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்திருக்கிறார்.

மேலும், ‘பாலியல் வன்கொடுமை செய்ததைப் பற்றி, வெளியில் யாரிடமாவது கூறினால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவேன்’ எனச் சிறுமியை அவர் மிரட்டியிருக்கிறார்.

தற்போது இதில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பப்பட்டிருக்கிறார்” என்று கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்