சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்!

Date:

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை இன்று (6) முதல் வெள்ளிக்கிழமை (08) வரை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 09.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலம் இன்றும் (6) நாளையும் (7) மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நாளை (07) மாலை 7.00 மணிக்கு நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு சட்டமூலங்களின் மூன்றாம் வாசிப்பு இரவு 7.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும் வாய்மூல கேள்வி பதில் அமர்வுகளை வேறொரு நாளுக்கு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் அந்த இரண்டு நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும். முன்னதாக தீர்மானித்தபடி, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஓகஸ்ட் 8ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் லால் காந்த முறைப்பாடு

அமைச்சர் கே.டி. லால் காந்த, தனது சொத்துக்கள் குறித்த அறிவிப்பு தொடர்பாக...

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவை பதவிவிலக உத்தரவிட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி...

யாழ் விபத்தில் தந்தை, மகன் பலி

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்