ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மதிவெல பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடிபோதையில் உறுப்பினரின் வீட்டு பால்கனிக்கு வந்த உறுப்பினர் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களால் சமூகத்தில் விமர்சிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
நேற்று (5) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.




