UPDATE: யாழில் மீற்றர் வட்டி வாங்கிய பெண் தற்கொலை!

Date:

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் மனைவி, கடன் தொல்லையால் உயிர் மாய்த்துள்ளார்.

நேற்று (4) பகல் 12.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், ஜெயராசா அருள்பாலினி (33) என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் 3 பிள்ளைகளின் தாயார்.

கணவர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, சிறு குழந்தை அழும் சத்தம் கேட்டதாகவும், கதவு திறக்கப்படாததால், உடைத்து திறந்தபோது, மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், அவரது 11 மாத குழந்தை, தாயாரின் கால்களை பிடித்தபடி அழுது கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் மீற்றர் வட்டியா வாங்கி சில கோடி ரூபா கடனாளியாகியதாகவும், இதனால் வீடு, சொத்துக்களை இழந்து, தற்போது வாடகை வீட்டில் குடியிருப்பதாகவும் தெரிய வருகிறது.

நேற்று பகல் 11 மணியளவில் கடன் கொடுத்தவர் ஒருவர் வீட்டின் முன்பாக நின்று சத்தமிட்டு பேசிவிட்டு சென்றதாகவும், இதை தொடர்ந்து அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் தெரிய வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்