கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Date:

காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி முறிகண்டிக்கும், இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ9 வீதியில் இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியுடன் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்
காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (29) அதிகாலை உயிரிலந்துள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செனவிரட்ன எனவும் அவர் திருமணமாகி ஒரு வருடகாலமேயாகும்.

இறந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

spot_imgspot_img

More like this
Related

களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வெட்டுவக்கடே, முஸ்லிம் மசூதி வீதி பகுதியில்...

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்