கல்வியங்காட்டிலுள்ள தேவாலயத்தில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பாதிரியாரின் ஓய்வறைக்குள் நுழைந்து, அவரை கத்தி முனையில் மிரட்டி, கொள்ளையிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணியளவில் உள்புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
தேவாலயத்துக்குள் புகுந்த நால்வர் அங்கிருந்த பாதிரியாரின் கழுத்தில் கத்திவைத்து அவரிடமிருந்த முப்பதாயிரம் பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15,000 பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது




