28.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

கண்டி புனித அந்தோனியார் கல்லூரி போலி அனுமதிகள்: கிராம சேவகர் கைது!

போலி கிராம உத்தியோகபூர்வ சான்றிதழ்களை வழங்கி 29 பிள்ளைகளை கண்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரிக்கு அனுமதிப்பதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் கிராம சேவகர் ஒருவரை கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த 29 பிள்ளைகளும் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ பெயர், பதவி மற்றும் கடிதத் தலைப்பைப் போலியாக உருவாக்கி போலி ஆவணங்களைத் தயாரித்து இந்தப் பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிப்பரில் கஞ்சா கடத்தல்: சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

Pagetamil

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Pagetamil

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Pagetamil

உடமையில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் குற்றவாளி என வவுனியா நீதிமன்றில் தீர்ப்பு: மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை!

Pagetamil

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!