ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ரொக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவே. இந்த விண்கலம் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில், கடைசி நேரத்தில் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சிக்கியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் மேற்பரப்பின் மோதி நொறுங்கியதாக ராஸ்காமோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், என்னவிதமான தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன என்பது குறித்து விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் ராஸ்காமோஸ் தெரிவித்துள்ளது.
800 கிலோ எடையுள்ள லூனா-25 விண்கலம், திங்கள்கிழமை நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியது, இது வரலாற்றில் முதல் முறையாகும்.
லூனா-25 உடனான தொடர்பு சனிக்கிழமை மதியம் 2:57 மணிக்கு (11:57 GMT) துண்டிக்கப்பட்டதாக ரோஸ்கோஸ்மோஸ் கூறினார்.
பூர்வாங்க கண்டுபிடிப்புகளின்படி, நிலவின் மேற்பரப்பில் மோதியதைத் தொடர்ந்து லேண்டர் இல்லாமல் போய்விட்டது என்று ரோஸ்கோஸ்மோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.



