வடமேற்கு சிரியாவில் நடந்த மோதலில் தமது தலைவர் தலைவர் அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் குழு வியாழக்கிழமை அறிவித்தது.
இட்லிப் மாகாணத்தில் தீவிரவாதக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் “நேரடி மோதல்களுக்குப் பிறகு” தலைவர் கொல்லப்பட்டார் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் செய்தித் தொடர்பாளர் டெலிகிராம் செய்தியிடல் செயலியில் அதன் சேனல்களில் பதிவு செய்யப்பட்ட செய்தியில், அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பதைக் குறிப்பிடாமல் கூறினார்.
செய்தித் தொடர்பாளர் குழுவின் புதிய தலைவரை – அதன் ஐந்தாவது – அபி ஹஃப்சன் அல்-ஹாஷிமி அல்-குராஷி என அறிவித்தார்.
2014 இல் ஈராக் மற்றும் சிரியாவில் எழுச்சி பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, பரந்த நிலப்பரப்பை கைப்பற்றி “கலிபா” அரசை அறிவித்தது.
அவர்களின் ஆட்சியில் தலை துண்டிக்கப்படுதல் மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுவது சாதாரணமாக நிகழ்ந்தது.
இந்த குழு 2017 இல் ஈராக்கிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவிலும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள் இன்னும் இரு நாடுகளிலும் தாக்குதல்களை நடத்துகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில், ஐ.எஸ்.ஐ.எஸ் அதன் முந்தைய தலைவரான அபு ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷி கொல்லப்பட்டதாகக் கூறியது.
அவரது முன்னோடியான அபு இப்ராஹிம் அல் குராஷி, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
குழுவின் முதல் தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதி, அக்டோபர் 2019 இல் இட்லிப்பில் கொல்லப்பட்டார்.




