சரத் வீரசேகரவின் வில்லங்க பேச்சுக்கு எதிர்ப்பு: வடக்கில் நாளை சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

Date:

வடமாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை முன்னிலையாகாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதென வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை  நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேக, அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாளை வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், நாளை காலை 9.30 மணிக்கு வடக்கிலுள்ள சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு எதிரில் ஒன்றுகூடி ஆர்ப்பா்டமொன்றிலும் ஈடுபடுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்