16 வயதுடைய பாடசாலை மாணவியை விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிகையலங்கார நிபுணர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான சந்தேக நபர் கண்டி தலவின்ன பிரதேசத்தில் சிகையலங்கார நிலையம் ஒன்றை நடத்தி வருபவர். அவர் இன்று கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகநபர் பாடசாலை மாணவியுடன் நெருக்கமாக இருந்ததாகவும், பின்னர் மாணவி தொர்பான அவதூறு வதந்திகளை பரப்பியதாகவும், அது தொடர்பில் அவரிடம் வினவிய போது, இது தொடர்பில் ஆறுதலாக பேச தன்னுடன் வருமாறு கூறி, விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1