ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. விஷாலின் 34 வது படமான இதை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கிறது.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இதில், விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹரி இயக்கிய ‘யானை’ படத்திலும் பிரியா பவானி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இவரும் ஹரியும் ‘ஆறு’, ‘சிங்கம்’, ‘வேங்கை’, ‘சிங்கம் 2’, ‘சாமி 2’ ஆகிய படங்களில் இணைந்திருந்தனர்.




