வடக்கு வைத்தியர்கள்- சட்டத்தரணிகளிடையே துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம்!

Date:

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி, வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது வருடமாக நாடாத்தப்படவுள்ள துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை(17) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக, பெண் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே முதன்முதலாக வலைப்பந்தாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே போட்டி தொடர்பான விடயங்கள் அறிவிக்கப்பட்டன.

கடந்த வருடம் முதல் தடவையாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிள்ளையானின் சித்திரவதை முகாமில் செயற்பட்ட 2 பேர் கைது!

முன்னாள் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற...

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது...

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்