Pagetamil
குற்றம்

கைதிகளுக்கு போதைப்பொருள் விற்ற சிறைக்காவலருக்கு ஆயுள் தண்டனை!

சிறைக்காவலர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட புதன்கிழமை (7) தீர்ப்பளித்தார்.

தண்டனை பெற்ற சிறைக்காவலர் எம்.ஜி. தெல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாலக மிஹிர பண்டார (வயது 45).

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சிறைக்காவலர் மீது சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டினார். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment