ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்ட விதிகளுக்கு முரணான விடயங்களை திருத்தினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இந்த ஊழல் தடுப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி வெளியிடப்பட்டது.




