பட்டாசு வெடித்து இளைஞன் பலி

Date:

தம்புத்தேகம பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றில் பட்டாசு கொளுத்த முயற்சித்த இளைஞன் ஒருவர் திடீரென கையில் வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

லக்மால் ஜயதிலக்க என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எரியாத பட்டாசு ஒன்றை பரிசோதித்து கொண்டிருந்த போது, அது திடீரென வெடித்து இளைஞன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இளைஞன் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்