27.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

அன்னை பூபதியை அஞ்சலித்த விக்னேஸ்வரன் அணி

அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் யாழ் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தலில் ஈகைச்சுடரினை மாவீரரின் தயார் ஒருவர் ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் வி. மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!