அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை கிராமத்தினுள் திங்கட்கிழமை (03) மாலை புகுந்த காட்டு யானைக் கூட்டத்தினால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மல்வத்தை கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த வயல் நிலங்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு சென்றுவிட்ட போதிலும் தனிமையான ஒருயானை வயல் வெளிகளூடாக பிரதான வீதியைக் கடந்து சென்றமையால் பிரதான வீதியில் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பாரிய பதற்றத்திற்குள்ளாகினர்.
தொடர்ச்சியாக தினமும் அப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைக்கூட்டங்கள் வயல் நிலங்களையும், விவசாய காணிகளையும், பயிர் மற்றும் மரங்களையும் பாரியளவில் நாசமாக்கி வருகின்றன.
எல்லைப் புறங்களை மையமாக வைத்து யானைப்பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என்பதுவே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.



