மலேசியாவில் கட்டாய மரண தண்டனை மற்றும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அகற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மனித உரிமைக் குழுக்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மலேசியாவில் கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சில குற்றங்களுக்குக் கட்டாய மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. அல்லது வாழ்நாள் முழுக்க சிறையில் கழிக்க வேண்டும்.
நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா மரண தண்டனையை முற்றாக அகற்றவில்லை.
அதே வேளையில் நீதிபதிகள் மரண தண்டனைக்குப் பதிலாக 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை விதிப்பதற்கு அது அனுமதி வழங்குகிறது. அல்லது சாட்டையடி வழங்கலாம். வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் முன்னைய விதிமுறையும் மாற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதருக்கும் உயிர்வாழும் உரிமை உண்டு என்பதைப் புறக்கணிக்கக்கூடாது என்று சட்டத் துணையமைச்சர் ராம்கர்ப்பால் சிங் குறிப்பிட்டார்.
நிறைவேற்றப்பட்ட தற்போதைய திருத்தங்கள், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட தற்போது மரண தண்டனை விதிக்கப்படும் 34 குற்றங்களுக்கு பொருந்தும்.
மலேசியாவில் 1,300 க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். மற்ற அனைத்து சட்ட முறையீடுகளும் தீர்ந்துவிட்ட அனைவரையும் அவர்கள் உள்ளடக்கியிருந்தனர். மலேசியாவில் உள்ள அத்தகைய நபர்கள் புதிய விதிகளின் கீழ் தண்டனை மறுஆய்வைப் பெறலாம்.



