உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (23) விசேட தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு அனைத்து அரசியல் கட்சி செயலாளர்களையும் தேர்தல் ஆணைக்குழுவுகு அழைத்து தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாத பிரச்சனைகள் குறித்து அங்கு பேசி முடிவெடுக்கப்படும்.
மேலும் தேர்தலுக்கு புதிய திகதியை அறிவிப்பதா அல்லது புதிய தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு இன்று முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




