கொடிகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 16 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
எழுதுமட்டுவாளில் உள்ள வீடொன்றில் வைத்து 50 கிலோகிராம் கஞ்சா கைமாற்றப்பட்டுவதாக தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொடிகாமம் பொலிசார் நேற்று சென்ற போது இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். மோட்டார் சைக்கிள் ஒன்று மாத்திரம் மீட்கப்பட்டது.
கைவிடப்பட்ட16 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
அந்த மோட்டார் சைக்கிள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சகோதரருடையது என குறிப்பிடப்பட்டது.
அவரது மோட்டார் சைக்கிள் கடத்தல்காரர்களிடம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பிலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




