வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் தங்கியிருந்த வீட்டினுள் மேற்கூரை ஓடுகளை அகற்றி அத்துமீறி நுழைந்து ஐந்து மடிக்கணினிகள் மற்றும் மின்சார கேத்திலை திருடிச் சென்ற இரு இளைஞர்களை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (7) காலையில் இந்த சம்பவம் நடந்தது.
கைதான இரண்டு மாணவர்களும் வவுனியா சிவபுரம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சகோதரர்கள்.
இந்த வீட்டில் பல்கலைக்கழக மாணவிகள் 05 பேர் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (7) அதிகாலை 1.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கூரை ஓடுகளை அகற்றி வீட்டுக்குள் நுழைந்த இரண்டு மாணவர்களும் தங்கும் அறையிலிருந்து பல்கலைக்கழக மாணவிகளின் 5 மடிக்கணினிகள் மற்றும் மின்சார கேத்திலுடன், 13,400 ரூபாவை திருடிச் செல்ல முயன்றனர்.
இந்த மாணவர்கள் தப்பிச்செல்ல முயன்ற போது மாணவிகளின் அலறல் சத்தம் காரணமாக அயலவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




