வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர் குறியீட்டு நடைமுறை இன்னும் மூன்று மாதங்களில் முற்றுப்பெற்று விடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறுகிறார்.
நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்தவுடன் போதியளவு எரிபொருள் விநியோகத்தை வழங்க முடியும் என தெரிவித்த அமைச்சர், அதன் பின்னர் எந்நேரமும் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று வழமை போன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.




