கீரிமலை நகுலேஸ்வரர் முத்தேர் இரதோற்சவம்

Date:

வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான யாழ். கீரிமலை நகுலேஸ்வர், நகுலாம்பிகை தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் நகுலேஸ்வர், நகுலாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கும் வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து விளங்கும் விநாயகர், வள்ளி, முருகன் தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேசக, ஆராதனைகள் என்பன இடம்பெற்று உள்வீதியுடாக பீடத்தில் வீற்று வந்து வெளி வீதியில் முத்தேர் எறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ் ஆலயத்தின் கொடியேற்றயுற்சவம் கடந்த 10.02.2023 அன்று ஆரம்பமாகி நாளை சமுத்திரத் தீர்த்த உற்சவத்துடன் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும். இவ் கிரியைகளை ஆலய பிரதமகுரு ஸ்ரீ. இராஜராஜக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு கிரியைகளை நடாத்திவைத்தனர்.

மஹாசிவராத்திரி நன்நாளில் பல பகாங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்