அந்த ஊசி ஏற்றினேனா?: ஹன்சிகா விளக்கம்

Date:

தனது அம்மாவே தனக்கு ஹார்மோன் ஊசி செலுத்தியதாக வெளியான தகவல் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார்.

மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, 2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுத்ரு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டில் இந்தியில் ஹிமேஷ் ரேஷம்மியாவின் ஆப் கா சுரூர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஹன்சிகா, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி இந்தியில் ஹீரோயினாக அறிமுகமான போது பல்வேறு கடுமையான சர்ச்சைகளை எதிர்கொண்டார். குறிப்பாக கோய் மில் கயா படத்தில் குழந்தையாக இருந்த அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரிய பெண்ணாக மாறினார்.

ஹன்சிகா மோத்வானியின் இந்த திடீர் மாற்றம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஹன்சிகா மோத்வானிக்கு அவரது தாயார் பெரியவராக வளர ஹார்மோன் ஊசி போட்டதாக தகவல் பரவியது.

இந்த வதந்திகள் குறித்து தற்போது மவுனம் கலைத்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்ச்சியான லவ் ஷாதி டிராமா டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் தனக்கும் சோஹேல் கதூரியாவுக்கும் திருமணம் என அறிவிக்கப்பட்டதும் ஊடகங்களில் வெளியான தகவல்களை பார்த்து தானும் தனது அம்மாவும் மிகுந்த வேதனைக்கு ஆளானதாகவும், தான்தான் தனது அம்மாவை சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது தாயார் தனக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக வதந்திகள் பரவிய காலத்தை நினைவுபடுத்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, “இது ஒரு பிரபலமாக இருப்பதற்கு எனக்கு கிடைத்த பரிசு. எனக்கு 21 வயதாக இருக்கும் போது இப்படி ஒரு முட்டாள்தனத்தை எழுதினார்கள். நான் அப்போது அதை எடுத்திருந்தால் இப்போதும் என்னால் அதை எடுக்கமுடியும். நான் பெண்ணாக வளர என் அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி செலுத்தியதாக கூறினார்கள், என்று வருத்தப்பட்டார்.

அப்போது பேசிய ஹன்சிகாவின் அம்மா ,அது உண்மையாக இருந்தால், நான் டாடா, பிர்லா, போன்ற சில கோடீஸ்வரர்களை விட பணக்காரியாக இருக்க வேண்டும். நாங்கள் பஞ்சாபி மக்கள், எங்கள் மகள்கள் 12 முதல் 16 வயதுக்குள் பெரியவராக வளர்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்தார்.

நடிகை ஹன்சிகாவும் சோஹேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஹன்சிகாவின் தோழியான ரிங்கியை சோஹேல் திருமணம் செய்து கொண்டார் என்பதும், ஹன்சிகாவும் அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டதும் பின்னர் தெரிய வந்தது. அந்த திருமண வீடியோக்களும் வைரலானது. ஹன்சிகா தனது தோழியின் கணவரை திருடிவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் லவ் ஷாதி டிராமாவின் முதல் எபிசோடில் அதுகுறித்து பேசிய நடிகை ஹன்சிகா மோத்வானி இது தான் ஒரு பிரபலமாக இருப்பதற்கான விலை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை...

இயற்கை வளங்கள் இல்லாத சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக மாறியது எப்படி? இலங்கை ஏன் இன்னும் போராடுகிறது?

தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களோ, கச்சா எண்ணெயோ இல்லாத, கடலால் சூழப்படாத...

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்