24.1 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இந்தியா

தமிழகத்தில் சென்னை, நெல்லை உட்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் சென்னை உட்பட 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, நெல்லை, தென்காசி உட்பட தமிழகத்தின் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னையில் மட்டும் ஐந்து இடங்களில் சோதனை நடக்கிறது. கொடுங்கையூர், மண்ணடி என ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, நெல்லை டவுன் கரிக்காதோப்பு பகுதியில் உள்ள ஒருவரின் வீடு, நெல்லை ஏர்வாடி பகுதியில் உள்ள ஒருவரின் வீடு என தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

தென்காசி அருகே அச்சன்புதூர் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment