தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000ஐ நெருங்குகிது. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன, இப்பகுதி தொடர்ச்சியான சக்திவாய்ந்த பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
திங்களன்று ஒரு மணிநேர இடைவெளியில் ரிக்டர் அளவு-7.8 மற்றும் -7.6 நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. அதனால் தென்கிழக்கு துருக்கி, வடக்கு சிரியாவின் பல நகரங்களில் முழு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.
துருக்கியில் 5,894 பேரும், அண்டை நாடான சிரியாவில் 1,932 பேரும் உயிரிழந்துள்ளனர்.
With calm and care, the #WhiteHelmets rescue worker spoke to Lily to soothe her as he successfully extracted her from the debris of her home in the city of Salqin, located to the west of #Idlib, on Monday evening.#Syria #earthquake pic.twitter.com/y71xfjC3av
— The White Helmets (@SyriaCivilDef) February 7, 2023
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் – அவசரகால நிலையை துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
தெற்கு துருக்கியில் நிலநடுக்கங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,894 ஆக உயர்ந்துள்ளது, 34,810 பேர் காயமடைந்துள்ளனர்.
சிரியாவில் குறைந்தது 1,932 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
சிரிய அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ, லதாகியா, ஹமா, இட்லிப் மற்றும் டார்டஸ் மாகாணங்களில் குறைந்தது 812 பேர் கொல்லப்பட்டனர். 1,449 பேர் காயமடைந்தனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கில் குறைந்தது 1,120 பேர் கொல்லப்பட்டனர். 2,500 பேர் காயமடைந்தனர், மேலும் எண்ணிக்கை “வியத்தகு அளவில் உயரும்” என்று பிராந்தியத்தில் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
Greek rescuers tried hard to get a young girl out of the ruble alive. They did not manage. Minutes after, they are rescuing her 6 yrs old sister. And they burst into tears. And then applauding. The mystery of life, the power of love. #Turkey, you are not alone! #TurkeyEarthquake pic.twitter.com/gS26kX6C3t
— Makis Mylonas (@MylonasMakis) February 7, 2023
“இது எதிர்பாராத பெரிய நிலநடுக்கம்” என்று ஜப்பானை தளமாகக் கொண்ட டோஹோகு பல்கலைக்கழகத்தின் பேரிடர் அறிவியல் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான ஷின்ஜி தோடா கூறினார்.
“இது உலகின் மிகப்பெரிய உள்நாட்டு நிலநடுக்கங்களில் ஒன்றாகும்” என்று டோடா கூறினார்.
பேரழிவைத் தொடர்ந்து, இடிபாடுகளின் அடியில் சிக்கிய பலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமது இருப்பிடங்களை குறிப்பிட்டு, உதவி கோரினர்.
Syrian under the rubble he says ; “I bear witness that there is no god but God and that Muhammad is the Messenger of God , I don't know if I will die or live, there are two families here’#Syria #Turkey #earthquake #earthquakeinturkey #earthquakes pic.twitter.com/GBx0hYr7vw
— saraqr (@saraqr_61) February 7, 2023
சார்ம்குவெல் என்று அழைக்கப்படும் யூடியூபரான ஃபிரத் யய்லா அவர்களில் ஒருவர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் வெளியிடப்பட்ட வீடியோவில், முதல் பூகம்பத்திற்குப் பிறகு, ஹடாய் மாகாணத்தின் மத்திய அந்தாக்யா மாவட்டத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவிப்பதாகவும், தன்னைக் காப்பாற்றுமாறு தன்னைப் பின்தொடர்பவர்களிடம் கோரினார்.
Another miracle news…🙏Heroes rescued 2-year-old 'Muhammet' 44 hours later. 😇
They gave the thirsty baby water with the cap of the bottle. I hope the heroes will always be with us🙏#TurkeyQuake #earthquakeinturkey #PrayForTurkey #earthquakes #turkey 🇹🇷 pic.twitter.com/asbTT968XB— Fatma De.35 (@FatmaDe80674479) February 7, 2023
“நண்பர்களே, நாங்கள் நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டோம்,” என்று அவர் ஒரு இருண்ட இடத்தில் படமாக்கப்பட்ட வீடியோவில் கூறினார். “அம்மா! நலமா? அம்மா! நீ எங்கே சிக்கியுள்ளீர்கள் என்று சொல்லுங்கள். தயவு செய்து உதவவும்!” அவர் தனது வீட்டு முகவரியுடன் வீடியோவில் குறிப்பிட்டார்.
பின்னர், தான் காப்பாற்றப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் மற்றொரு வீடியோ வெளியிட்டார், ஆனால் அவரது தாயார் இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்படவில்லை.
ஹடேயின் இஸ்கெண்டருன் மாவட்டத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய மற்றொரு வீடியோவில் ஒரு இளைஞன் தனது முகவரியைப் பகிர்ந்துகொண்டு, “உன் கடவுளை நீங்கள் விரும்பினால், தயவுசெய்து வந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கூறினார்.
இந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டது.
A cat was rescued in. Turkey after the whole one day .Thank you rescue teams .❤️❤️#earthquake #Turkey #TurkeyEarthquake #Turkiye #Syria #syriaearthquake pic.twitter.com/DspnDwATso
— Aami Shaw (@PGTAnalytics) February 7, 2023
பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட துருக்கி மாகாணங்களில் ஹடேயும் ஒன்று. விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளதால், தரைமட்டமான நகரத்திற்கு உதவி மற்றும் மீட்புக் குழுக்கள் செல்வது கடினமாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் 5,775 கட்டிடங்கள் இடிந்ததாகவும், 20,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல்லில் படிக்கும் 20 வயதான போரன் குபத், மாலத்யா நகரில் உள்ள உறவினர்களை சந்திக்கச் சென்றபோது, இரண்டாவது நிலநடுக்கம் அவரது குடும்ப வீட்டைத் தாக்கியது.
Pulling a child alive from under the rubble in Turkey
— Muhammad Smiry 🇵🇸 (@MuhammadSmiry) February 7, 2023
முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு அபார்ட்மென்ட் பாதுகாப்பானது என்று நினைத்து உள்ளே நுழைந்ததாகவும், ஆனால் தூங்கிக்கொண்டிருந்தபோது இரண்டாவது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாகவும் குபாட் கூறினார்.
அவர் தனது தாய், பாட்டி மற்றும் இரண்டு மாமாக்களுடன் இடிபாடுகளிற்குள் சிக்கியிருந்த படி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில் உதவி கேட்டார்.
“இதைப் பார்க்கும் அனைவரும் வந்து எங்களுக்கு உதவுங்கள். இப்போது, அனைவரும் எங்களுக்கு உதவ வாருங்கள்!” அவர் தனது முகவரியை விரிவாக விவரித்தார்.
நண்பர்கள் உடனடியாக செயல்பட்டதாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கேன் டர்கர் என்ற ருவிட்டர் பயனர், திங்களன்று ஒரு செய்தியை வெளியிட்டார். அவரும், அவரது மனைவியும், குழந்தையும் அந்தாக்யாவில் உள்ள தி லிவான் ஹோட்டலில் சிக்கிக் கொண்டனர்.
“படிக்கட்டுகள் சரிந்துவிட்டன, நாங்கள் மூன்றாவது மாடியில் சிக்கிக்கொண்டோம். நாங்கள் இன்னும் நடுங்குகிறோம். தயவு செய்து உதவுங்கள்” என்று கெஞ்சினார்.
மீட்புக் குழுக்களின் உதவியின்றி தனது நண்பர்களால் காப்பாற்றப்பட்டதாக மறுநாள் டர்கர் ருவீட் செய்தார்.
While all the focus is on #Turkey. This is The White Helmets volunteers in #Syria, 3000 of them are on the ground searching for survivors and they really need your help if you can afford it❤️https://t.co/rWNR681wgY pic.twitter.com/J85UI72UpS
— Sofia Ukraini (@SlavaUk30722777) February 7, 2023
எலாசிக் மாகாணத்தில் 1938 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்குப் பிறகு துருக்கியைத் தாக்கிய மிகப்பெரிய பேரழிவு என்று ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் புதன்கிழமை அறிவித்தார்.
துருக்கியில் மட்டும் 8,000க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் அடியில் சிக்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு துருக்கியில் பலர் மீட்பு முயற்சிகளில் புகார் கூறியுள்ளனர்.
Miracle!❤️👏🏼After 37 hours, a 5-year-old girl was rescued from the rubble in #Turkey.🇹🇷#TurkeyEarthquake #PrayForTurkey pic.twitter.com/R4p1VRfENV
— Sarah Abraham✡️ (@sarajewish) February 7, 2023
சமூக ஊடகங்களில் தங்கள் நிலைமையைப் பதிவுசெய்து மீட்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் இருந்தாலும், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு கீழே உள்ள தங்களுக்காகவோ அல்லது அணுக முடியாத அன்பானவர்களுக்காகவோ உதவி கோரி எண்ணற்ற செய்திகள் இணையத்தில் இன்னும் உள்ளன.
பெரும்பாலானவர்களுக்கு நிலைமை எப்படி மாறியது என்பதை அறிவது கடினம்.
சிக்கலான சிரியா நிலைமை
கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக போரினால் பாதிக்கப்பட்டு பல மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் சிரியாவிற்கு இந்த நிலநடுக்கம் பேரழிவே. சிரியாவில் உயிரிழப்பு 2000ஐ நெருங்குகிறது.
துருக்கியுடன் ஒப்பிடும் போது, மீட்பு பணி வசதிகள் சிரியாவின் பல பகுதிகளில் குறைவு. குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்.
The joy of civil defense personnel and civilians while extracting two alive girls from the rubble of their destroyed house in northern #Syria
🙏🏻❤️🔥#زلزال #هزة_أرضية#earthquake pic.twitter.com/9TbiflpwSp— Mohammad – محمد عساكره (@mohammed_asakra) February 7, 2023
சிரியாவின் கள யதார்த்தமும் சிக்கலாக உள்ளது. சிரியாவின் பெரும்பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும், சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத வடகிழக்கு பகுதியையே நிலநடுக்கம் பெருமளவில் அழித்தது. இருப்பினும், அலெப்போவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
When hope and pain hold hands #Syria #earthquakes pic.twitter.com/BdR8Fdalfq
— Omar Alshogre | عمر الشغري (@omarAlshogre) February 7, 2023
சிரியாவின் பெரும்பகுதியை அரசு கட்டுப்படுத்தினாலும், வடக்கின் பெரும்பகுதி வெவ்வேறு மற்றும் சில நேரங்களில் முரண்பட்ட குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. வடமேற்கு பகுதியின் ஒரு பகுதியை துருக்கியும், மற்றொரு பகுதியை அல்-கொய்தாவுடன் தொடர்பு கொண்ட கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமாலும் கட்டுப்படுத்துகிறது. சிரியாவின் வடகிழக்கு பெரும்பாலும் அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சிரிய சகோரிகள்
சிரியாவில் இடிபாடுகளிற்குள் சிக்கியிருந்த இரண்டு சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தனது இளைய சகோதரியை பாதுகாத்தபடி இடிபாடுகளில் சிக்கியிருந்த சிரிய சிறுமியொருவர், மீட்பு பணியாளர்களிடம் பேசும் வீடியோ மனதை உருக்குவதாக உள்ளது.
This video broke my heart 💔
The little girl says to the rescuer when he reaches her: Get me out from under this wreckage,sir,me and my sister, and I will become your slave.#earthquakeinturkey #Syria #هزه_ارضيه #زلزال #İstanbul #earthquake #Turkey #PrayForTurkey pic.twitter.com/U9mMrZdROM
— Zuher Almosa (@AlmosaZuher) February 7, 2023
தன்னையும், சகோதரியையும் மீட்கும்படியும், நான் உங்கள் அடிமையாக இருப்பேன் என்றும் சிறுமி குறிப்பட்டதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.
இருவரும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சிறிய மகளின் கை மட்டும் இடிபாடுகளிற்கு வெளியில் தெரியும் நிலையில், மகளின் கையை பிடித்தபடி தந்தை உட்கார்ந்திருக்கும் புகைப்படமும் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
