ஐஸ் பார்ட்டியில் சிக்கிய அரச புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்!

Date:

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) உத்தியோகத்தர் ஒருவர், பேலியகொடையில் உள்ள வீடொன்றில் மேலும் இருவருடன் இணைந்து ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய போது, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அரச புலனாய்வு சேவையின் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். இந்த புலனாய்வு உத்தியோகத்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைக்கு அடிமையானவர்கள் குழுவுடன் போதைப்பொருள் உட்கொள்வதற்காக அவர் அடிக்கடி பேலியகொடைக்கு வருவதாகவும் கிடைத்த தகவலின் பிரகாரம் இவரை கைது செய்ய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் இருந்து 550 மில்லிகிராம் ஐஸ் மற்றும் ஆறு கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...

மது அருந்த ரூ.1000 தர மறுத்த தாயை கொன்ற மகன்!

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன்...

கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்