‘எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது’: பல்கலைக்கழக காதலியை கொன்ற இளைஞன் வாக்குமூலம்!

Date:

கொழும்பு குதிரைபந்தய திடலில் முன்னாள் காதலனால், பல்கலைகழக மாணவி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு ஆச்சரியமான பரிசு வழங்கப் போவதாக கூறி, காதலியின் கண்களை துப்பட்டாவினால் கட்டிவிட்டு, கழுத்தில் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரை கொலை செய்ய ஒரு மாதமாக திட்டமிட்டதாகவும் கைதான முன்னாள் காதலன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் சதுரி ஹன்சிகா மல்லவராச்சி (24) என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி மதியம் ஹன்சிகா கொலை செய்யப்பட்டார்.

அதே பீடத்தில் கல்வி கற்கும் சந்தேக நபர் பசிது சதுரங்க பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

2019 முதல் நான் ஒரு மனநோய் நிலைக்கு மருந்து எடுத்து வருகிறேன். 2020 இல் ஹன்சிகாவுடன் நட்பு ஏற்பட்டது. நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று அவரிடம் சொல்லவில்லை. ஆனால் அவள் 4-5 மாதங்களுக்கு முன்பு அதைப் பற்றி அறிந்தாள், நான் புண்படுத்தப்பட்டேன். அவள் எங்கள் உறவை நிறுத்த விரும்பினாள்.

நான் மருந்து சாப்பிடும் தகவல் தெரிந்ததும், அவள் மாறினாள். அவள் தொடர்ந்து என்னை “பைத்தியம்” என்று அழைத்தாள். வேறொரு உறவின் காரணமாக அவள் மாறிவிட்டாளா என்று நான் சோதித்தேன். ஆனால் அவளுக்கு அத்தகைய தொடர்பு இல்லை. அவள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

என்னை எப்போதும் பைத்தியம் என்று அழைப்பதால் நான் அவளில் வேதனைப்பட்டேன்.

உறவு இல்லாததால் அவள் எனக்கு சொந்தமில்லை. அவள் வேறு யாருக்கும் சொந்தமாகக் கூடாது என்பதற்காக அவளைக் கொல்ல திட்டமிட்டேன்.

கடந்த சனிக்கிழமை அவள் என்னிடம் தகராறு செய்தாள். இந்த உறவை முடித்து விடுவோம் என்றாள். அதற்குள் அவள் உறவை நிறுத்திவிட்டாள்.

அவளை கொல்ல திட்டமிட்டேன். ஞாயிற்றுக்கிழமை வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கத்தி ஒன்றை வாங்கினேன். செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து கத்தியை பையில் வைத்துக்கொண்டு வந்தேன்.

காலையில் முதல் விரிவுரையில் கலந்து கொண்ட பிறகு, ஒரு ஆச்சரிய (Surprise) கதை சொல்ல குதிரைப்பந்தய திடல மைதானத்திற்குச் செல்லலாமா என்று ஹன்சிகாவிடம் கேட்டேன்.

முதலில் அவர் தனது மறுப்பைத் தெரிவித்தார், பின்னர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார். இருவரும் ரேஸ்கோர்ஸ் நோக்கி நடந்தோம். அவள் என்னை பிரிய நினைத்ததால், அவளைக் கொல்ல நினைத்தேன்.

நான் அவளிடம் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது“ என கூறி, அவளை ரேஸ்கோர்ஸ் ஸ்கோர்போர்டுக்கு அழைத்து வந்தேன்.

என்ன சர்ப்ரைஸ் என கேட்டாள். கண்ணை மூடச் சொன்னேன். ஒரு தாவணியால் அவளது கண்களை கட்டச் சொன்னேன். அவள் தாவணியால் கண்ணை கட்டிய படி, என்ன சர்ப்ரைஸ் என்றாள்.

அவளது கழுத்தில் கத்தியால் குத்தினேன்.

அவள் சத்தமாக அலறி, கண்களை மூடியிருந்த தாவணியை கழற்றிவிட்டு உதவி கேட்டு கத்தினாள். அப்போது, ​​மீண்டும் கத்தியால் குத்தினார். சம்பவ இடத்திற்கு அருகில் இளம் பெண்கள் சிலர் இருந்ததால், அவர்கள் அந்த இடத்திற்கு வருவார்கள் என்று பயந்து, நான் அந்த இடத்தை விட்டு ஓடினேன்.

ஓடும் போது “சுட்டி” (காதலியை செல்லமாக அப்படித்தான் அழைத்துள்ளார்) என்று அழைத்து திரும்பிப் பார்த்தேன். சுட்டி அசைவின்றி கிடந்தார்.

ஓடிப்போய் பேருந்தில் ஏறினேன். வெல்லம்பிட்டிக்கு சென்றேன். புகையிரதத்தில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டேன். நீண்டநேரம் காத்திருந்தும் புகையிரதம் வரவில்லை.

அதனால் வீட்டிற்கு சென்றேன். வீட்டிற்குச் சென்று எனது புத்தகப் பைகள் மற்றும் பொருட்களை வீட்டில் வைத்து விட்டு,  களனி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்குள் பொலிசார் கைது செய்தனர் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்