உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று வெளியாகும்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் மாவட்ட செயலாளர்கள் ஊடாக இன்று (4) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு மூன்று முதல் மூன்றரை நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெளியாகும் இந்த விளம்பரத்தில் திகதி, இடம், பாதுகாப்பு விவரங்கள், வேட்பாளர்களின் எண்ணிக்கை, பெண்களின் பிரதிநிதித்துவம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி பின்னர் வெளியிடப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்