கல்லுண்டாயில் வாள்வெட்டு!

Date:

இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டுக்கு வெளியே வந்து வீதியில் நின்றவேளை முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

தமக்கான வேலை வாய்ப்பில் அநீதி இழைக்கப்படுவதைக் கண்டித்தும் உடனடியாக வேலை வாய்ப்பை...

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” – விஜய்யின் குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும்...

சகோதரியின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த புனே கொலை

மகா​ராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்​குநர் கேதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்