தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் முகமாக தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது.
அந்தவகையில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
இந்த மகஜரினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்கவுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்தனர்.




