முல்லைத்தீவு கோட்டைக்கட்டியகுளம் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைகழகத்திற்கு மூவர் தெரிவு

Date:

முல்லைத்தீவு துனுக்காய் கல்வி வலயத்தின் கோட்டைகட்டியகுளம்
பாடசாலையிலிருந்து முதல் தடவையாக மூன்று மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் பின்தங்கிய
எல்லைப்புற கிராமமாக காணப்படுகின்ற குறித்த பாடசாலையிலிருந்து முற்று
முழுதாக பாடசாலை கல்வியை மட்டுமே பெற்ற மூன்று மாணவர்கள்
பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை பாடசாலை சமூகத்தில் பெரும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் குறிப்பாக குறித்த மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் வே. திவாகரன் ஆகியோர் பாடசாலை சமூகம் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

கோட்டைகட்டியகுளம் பாடசாலையில் 2016 இல் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் கு.சுஜாந் 3B (மாவட்ட நிலை 83 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
சி்.சிறிமேனகன் 3B (மாவட்ட நிலை 89 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
ஜெ.யசிந்தன் 2BC (மாவட்ட நிலை 12 சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விளையாட்டு
விஞ்ஞான முகாமைத்துவம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாடசாலை தேசியமட்ட எறிபந்தாட்ட  வீரர்களாகவும் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்