முல்லைத்தீவு கோட்டைக்கட்டியகுளம் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைகழகத்திற்கு மூவர் தெரிவு

Date:

முல்லைத்தீவு துனுக்காய் கல்வி வலயத்தின் கோட்டைகட்டியகுளம்
பாடசாலையிலிருந்து முதல் தடவையாக மூன்று மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் பின்தங்கிய
எல்லைப்புற கிராமமாக காணப்படுகின்ற குறித்த பாடசாலையிலிருந்து முற்று
முழுதாக பாடசாலை கல்வியை மட்டுமே பெற்ற மூன்று மாணவர்கள்
பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை பாடசாலை சமூகத்தில் பெரும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் குறிப்பாக குறித்த மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் வே. திவாகரன் ஆகியோர் பாடசாலை சமூகம் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

கோட்டைகட்டியகுளம் பாடசாலையில் 2016 இல் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் கு.சுஜாந் 3B (மாவட்ட நிலை 83 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
சி்.சிறிமேனகன் 3B (மாவட்ட நிலை 89 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
ஜெ.யசிந்தன் 2BC (மாவட்ட நிலை 12 சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விளையாட்டு
விஞ்ஞான முகாமைத்துவம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாடசாலை தேசியமட்ட எறிபந்தாட்ட  வீரர்களாகவும் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்