முல்லைத்தீவு கோட்டைக்கட்டியகுளம் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைகழகத்திற்கு மூவர் தெரிவு

Date:

முல்லைத்தீவு துனுக்காய் கல்வி வலயத்தின் கோட்டைகட்டியகுளம்
பாடசாலையிலிருந்து முதல் தடவையாக மூன்று மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் பின்தங்கிய
எல்லைப்புற கிராமமாக காணப்படுகின்ற குறித்த பாடசாலையிலிருந்து முற்று
முழுதாக பாடசாலை கல்வியை மட்டுமே பெற்ற மூன்று மாணவர்கள்
பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை பாடசாலை சமூகத்தில் பெரும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் குறிப்பாக குறித்த மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் வே. திவாகரன் ஆகியோர் பாடசாலை சமூகம் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

கோட்டைகட்டியகுளம் பாடசாலையில் 2016 இல் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் கு.சுஜாந் 3B (மாவட்ட நிலை 83 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
சி்.சிறிமேனகன் 3B (மாவட்ட நிலை 89 கிழக்கு பல்கலைக்கழகம் கலைப்பீடம்)
ஜெ.யசிந்தன் 2BC (மாவட்ட நிலை 12 சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விளையாட்டு
விஞ்ஞான முகாமைத்துவம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாடசாலை தேசியமட்ட எறிபந்தாட்ட  வீரர்களாகவும் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21...

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்