குற்றம்

பேஸ்புக் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் கைது!

வெலிகம பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 9 இளைஞர்களை கைது செய்துள்ளதாக மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு சட்டவிரோத போதைப்பொருள், கஞ்சா மற்றும் இனந்தெரியாத போதைப்பொருளுடன் 08 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் 21, 24, 27, 35, 22, 17 வயதுடைய பெலியத்த, சியாவலல, உடுகாவ – தெலிஜ்ஜவில, கனங்கே கடவிடிய, மிரிஸ்ஸ, பெலான மற்றும் ரணால ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துக்கு நாடளாவிய ரீதியில் இருந்து பலர் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

15 வயது சிறுமி போதையூசி ஏற்றப்பட்டு கூட்டு வன்புணர்வு: 20 வயது யுவதி, 3 இளைஞர்கள் கைது!

Pagetamil

குளித்துக் கொண்டிருந்த போது புகைப்படம் எடுத்த இளைஞனை குளக்கரையில் கும்மியெடுத்த யாழ் யுவதிகள்!

Pagetamil

அவ்வளவு வெறி… மாங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிள் மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை

Pagetamil

தலைமறைவாக இருந்தவரை காட்டிக் கொடுத்த காது: மகளை வல்லுறவுக்குள்ளாக்கியதால் 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் சிக்கிய கதை!

Pagetamil

Leave a Comment