சட்டப்படி திருமணம் செய்யாத மனைவி மாடியிலிருந்து குதித்தார்: அரச நிதி நிறுவன உயரதிகாரிக்கு விளக்கமறியல்!

Date:

அரச நிதி நிறுவனமொன்றின் உதவிப் பணிப்பாளர் ஒருவரை நவம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் கம்பஹா, ஒருதொட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை சில சமயங்களில் சூடாக்கப்பட்ட இரும்பையும் பயன்படுத்தி சித்திரவதை செய்துள்ளார்.

குறித்த பெண் தப்பிக்கும் நோக்கில் வீட்டின் மேல் மாடியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அவர் வீட்டின் மேல் தளத்தில் இருந்து குதித்தாரா அல்லது தள்ளப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...

Update: பயணப்பொதியிலிருந்த பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?

சீதுவ பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயது...

வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்